டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமா இசை என்பது காலங்கள் கடந்து நிற்கும் ஒரு இசையாக உள்ளது. கே.வி.மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான் என இந்திய அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் பாடல்களை மற்ற மொழி சினிமா ரசிகர்களும் கேட்டார்கள், கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், கேட்பார்கள்.
ஆனால், சமீபத்திய தமிழ் சினிமா இசையில் தமிழின் அழகு குறைந்து, கவிதை நயம் குறைந்து, ஆங்கிலக் கலப்புடன், மற்ற மொழிக் கலப்புடன் கூடிய பாடல்கள்தான் அதிகம் வருகிறது என சினிமா இசையை ஆத்மார்த்தமாக ரசிக்கும் பலரும் குறை சொல்வார்கள். இன்றைய இசையைமப்பாளர்களைக் கேட்டால் அதற்கு 'தலைமுறை இடைவெளி, டிரென்ட்' என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சமாளிப்பார்கள்.
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தமிழில் சில படங்களில் நடித்தவருமான அனுராக் காஷ்யப் இன்றைய தமிழ் சினிமா இசையைப் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தெலுங்கு பான் இந்தியா படங்களுடன் தமிழ் சினிமாவும் போட்டியிட விரும்புகிறது. தமிழ்ப் பாடல்கள் கூட ஆங்கிலத்தில் இருக்கின்றன. வெளிநாட்டில் உள்ள ராக் பேண்டு குழுவினர் தமிழுக்கு வந்து, 'ஐயாம் கமிங் பார் யு, ஐயாம் கன்னிங் பார் யு' என திடீரென பாட ஆரம்பித்துவிட்டார்கள். இது தமிழ் சினிமா இசை அல்ல. தமிழ் சினிமா பாடல்களை நாங்கள் ஹிந்தியில் வாங்கிய காலம் ஒன்று இருந்தது. ராஜா சார் முதல் மற்றவர்கள் வரை வாங்கியிருக்கிறோம். இப்போது அவை எனக்குப் புரியவில்லை,” என்று பேசியிருக்கிறார்.




