ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

சென்னையில் நடந்த 'மிடில்கிளாஸ்' படவிழாவில் ஒரு காலத்தில் 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டதை உருக்கமாக பேசியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
அவர் பேசியது: ''சினிமா ஆசையில்தான் சென்னை வந்தேன். என் முதல் படம் ரிலீஸ் ஆன நாளில் என் திருமணம் நடந்தது. ஆனால், அதற்கு முன்பு நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஒரு தடவை வேலைக்காக சென்னையில் இருந்து பெங்களூரு சென்றேன். அதுவும் 5 ஆயிரம் சம்பளத்துக்காக, பின்னர், கம்பெனி சார்பில் சென்னைக்கு பிளைட்டில் வந்தபோது என்னிடம் பணம் அதிகம் இல்லை.
அப்போது எனக்கு ஏர்போர்ட்டில் ஒரு போட்டியில் குலுக்கல் முறையில் டிவி விழுந்தது. அதை வாங்க சில நடைமுறைகள் சொல்லி 300 கேட்டார்கள். ஆனால், என்னிடம் அப்போது கை வசம் 150 ரூபாய்தான் இருந்தது. மீதியை புரட்ட முடியாமல் தவித்தேன். அந்த டிவியை என்னால் வாங்க முடியவில்லை. அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து ஓரளவு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்.
இன்னும் சில ஆண்டுகள் அடிப்படை வாழ்க்கைக்கு எந்த கஷ்டமும் இல்லை என்ற நிலையில் இருக்கிறேன். மிடில்கிளாஸ் படத்துக்கு என்னிடம் பணியாற்றிய பிரணவ் இசையமைத்து இருப்பது மகிழ்ச்சி. என்னிடம் பணியாற்றி பலர் இசையமைப்பாளர் ஆனது கூடுதல் மகிழ்ச்சி'' என்றார்.




