டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது | ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் | என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம் | கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி |
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த 7ம் தேதி அதிகாலை நம் படைகள் தரைமட்டமாக்கின. இதில் ஆத்திரமடைந்த பாக்., ராணுவம், அன்று இரவே ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்கியது. இவை அனைத்தையும் பாதுகாப்பு வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.
இந்த நிலையில் தேசத்தை பாதுகாக்கும் பாதுகாப்பு வீரர்கள் பற்றி நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், ‛‛வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு வெகுதூரத்தில் படைவீரர் நம் எல்லையை காத்து நிற்கிறார். சந்திக்காத மக்கள் மற்றும் பிறந்து வளர்ந்த நாட்டின் அன்பிற்காக தேசத்தின் பாரத்தை தங்களது தோள்களில் சுமந்து நிற்கிறார்கள். அவர்களால் தான் அமைதி நிலவுகிறது, நம் பிள்ளைகள் அமைதியாக உறங்குகிறார்கள், நமது கொடிகள் சுதந்திரமாக பறக்கின்றன.
வீரர்களின் தியாகம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கிறது. நாங்கள் வாழும் வாழ்க்கையை, நீங்கள் (படை வீரர்கள்) உயிரை பணயம் வைத்து பாதுகாக்கிறீர்கள். ‛நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம், நாங்கள் நன்றி கூறுவோம்; எப்போதும்' இதுவே எங்கள் வாக்குறுதி. எங்கள் தாய்நாடு பாதுகாப்பாக இருக்கட்டும். எங்களை பாதுகாக்கும் வீரர்கள், அவர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் எப்போதும் பெருமையுடன், கண்ணியத்துடன் நடந்து செல்லுங்கள்'' எனக்குறிப்பிட்டுள்ளார்.