‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஆஸ்கர் விருது வாங்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தயாரிப்பாளரான டிவிவி. தனய்யா விருதுக்கு முன்பும் பின்பும் அந்தப் படத்திற்கான எந்த ஒரு நிகழ்வுகளிலும், கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் அழைப்பு விடுக்கவில்லையா, அல்லது அவராகக் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போகிறாரா என்பது தெரியாமல் உள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஒளிப்பதிவாரான செந்தில்குமார், 'ஆர்ஆர்ஆர்' குழுவினருக்கு ஒரு பெரும் பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் ராஜமௌலி, ராம்சரண், ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் சில தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஜுனியர் என்டிஆர் அவரது 30வது படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்தப் பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், படத்தின் தயாரிப்பாளரான டிவிவி.தனய்யா கலந்து கொள்ளாதது வழக்கம் போல ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பாகுபலி' படத்தின் தயாரிப்பாளரான ஷோபு எர்லகட்டா கலந்து கொண்ட நிலையில் 'ஆர்ஆர்ஆர்' தயாரிப்பாளர் ஏன் வரவில்லை என்பது ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியும்தான்.