சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

'பசங்க' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதுவரை பத்து படங்களை இயக்கிய பாண்டிராஜ் கடைசியாக இயக்கி வெளிவந்த படம் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்'. அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
அடுத்து அருள்நிதி நடிக்க உள்ள ஒரு படத்துக்கு கதை எழுத உள்ளார் பாண்டிராஜ். அதோடு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க பாண்டிராஜ் பேசி வருகிறாராம். இருவரும் இணைந்து 2016ல் வெளிவந்த 'கதகளி' படம் மிகவும் சுமாராகப் போன படம். அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இணைய உள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
தற்போது விக்ரம் நடிக்க 'தங்கலான்' படத்தையும், சூர்யா நடிக்க 'கங்குவா' படத்தையும் தயாரித்து வரும் அந்நிறுவனத்தின் அடுத்த படமாக விஷால், பாண்டிராஜ் படம் இருக்கும் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரலாம்.




