கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். முதலில் இப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. உடல் நலக்குறைவு காரணங்களால் அவர் இத்திரைப்படத்தை விட்டு விலகியுள்ளார்.
ராஷ்மிகா நடிக்கும் இந்த படத்திற்கு ரெயின்போ என தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் சாந்த ரூபன் இந்த படத்தை இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று நடபெற்றது. வரும் ஏப்ரல் 7 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
நடிகை ரஷ்மிகா கூறுகையில், "ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார்.