மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். முதலில் இப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. உடல் நலக்குறைவு காரணங்களால் அவர் இத்திரைப்படத்தை விட்டு விலகியுள்ளார்.
ராஷ்மிகா நடிக்கும் இந்த படத்திற்கு ரெயின்போ என தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் சாந்த ரூபன் இந்த படத்தை இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று நடபெற்றது. வரும் ஏப்ரல் 7 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
நடிகை ரஷ்மிகா கூறுகையில், "ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார்.