‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‛புஷ்பா' படத்தின் இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூலை பெற்றன. இந்த நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படத்திலும் ராஷ்மிகா மந்தனா இணைந்திருக்கிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் என பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ராஷ்மிகா மந்தனா ஒரு நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இது உண்மையாக இருந்தால் பெரும்பாலும் பக்கத்து வீட்டு பெண் வேடங்களுக்கு பெயர் பெற்ற ராஷ்மிகாவின் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். மேலும் இது படக்குழுவால் உறுதிப்படுத்தப்படாத செய்தி என்றாலும் கூட, இப்படி ஒரு செய்தி வெளியானதுமே வழக்கத்திலிருந்து மாறுபட்டு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா துணிச்சலாக நடிப்பது பாராட்டுக்குரியது என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.