தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த நாட்களில் மீடியாக்களுக்கு சரியான தீனியாக சில நிகழ்வுகள் நடந்தன. முதலில் 'கூலி' படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 2ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் ஹிந்தி நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வழக்கம் போல ரஜினிகாந்தின் மேடைப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடிகர் அஜித் திரையுலகில் நுழைந்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இடம் பெற்ற சில வரிகள் சிலரை மறைமுகமாகக் குறிப்பிட்டதாகவே மீடியாக்களும், ரசிகர்களும் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
நடிகர் சூர்யா குடும்பத்தினர் கடந்த 20 வருடங்களாக அவர்களது அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவி செய்ததை நேற்று விழாவாகக் கொண்டாடினார்கள். அதில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் பக்கம் போனாலும், யு டியூப் தளங்கள் பக்கம் போனாலும் ரஜினி, கமல், அஜித், சூர்யா என செய்திகள் நிறைந்து காணப்படுகிறது.