ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழின் முன்னணி நடிகரான தனுஷ், ஹிந்தியில் 2013ல் வெளிவந்த 'ராஞ்சனா' படம் மூலம் அறிமுகமானார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் சோனம் கபூர், அபய் தியோல் மற்றும் பலர் நடித்த அந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் கிளைமாக்சில் தனுஷ் இறந்துவிடுவார்.
அப்படத்தைத் தற்போது ரீரிலீஸ் செய்து வெளியிட்டுள்ளனர். ஆனால், 'ஏஐ' மூலம் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் உயிர்பிழைப்பதாக மாற்றியுள்ளார்கள். அப்படி மாற்றப்பட்ட கிளைமாக்ஸுக்கு படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் அவரது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அவரோ அவரது குழுவினரோ அந்த கிளைமாக்ஸ் மாற்றத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் நாயகனான தனுஷ் இது குறித்து அறிக்கை ஒன்றை நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "ராஞ்சனா' படத்தின் ஏஐ-ஆல் மாற்றப்பட்ட முடிவுடன் கூடிய மறு வெளியீடு என்னை முற்றிலும் கலக்கமடையச் செய்துள்ளது. இந்த மாற்று முடிவு படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது, மேலும் எனது தெளிவான எதிர்ப்பையும் மீறி சம்பந்தப்பட்டவர்கள் இதை முன்னெடுத்தனர். இது 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் உறுதியளித்த படமல்ல.
படங்கள் அல்லது உள்ளடக்கத்தை மாற்ற ஏஐ பயன்படுத்துவது கலை மற்றும் கலைஞர்களுக்கு மிகவும் கவலை தரும் முன்மாதிரியாக உள்ளது. இது கதை சொல்லலின் ஒருமைப்பாட்டையும், திரைப்படத்தின் பாரம்பரியத்தையும் அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.