பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கில் சாய்பல்லவி - ராணா நடிப்பில் உருவாகியுள்ள விராட பருவம் திரைப்படம் நாளை (ஜூன் 17) வெளியாக இருக்கிறது. வேணு உடுகுலா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சாய்பல்லவி ஒரு நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் பல வருடங்களுக்கு முன் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று முன்பே படக்குழுவினரால் சொல்லப்பட்டு வந்தது.
ஜெய்பீம் படத்தில் அந்த கதை உருவாக காரணமாக இருந்த செங்கனி கதாபாத்திரத்தை எப்படி அந்த படம் வெளியான சமயத்தில் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார்களோ அதேபோல இந்த படத்தில் சாய்பல்லவி ஏற்று நடித்துள்ள வெண்ணிலா என்கிற நிஜ கதாபாத்திரத்தை நேற்று படக்குழுவினர் அறிமுகப்படுத்தினார்கள்.
ஆந்திராவில் உள்ள வாரங்கல் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவரின் வாழ்க்கையில் நடந்த மிக கொடூரமான நிகழ்வுகளை மையப்படுத்தி தான் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் உருவாக காரணமான நிஜ நாயகியான வெண்ணிலாவை படத்தின் நாயகி சாய்பல்லவி நேற்று நேரில் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின்போது நாயகன் ராணா மற்றும் படக்குழுவினர் ஆகியோரும் உடனிருந்தனர்.