ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தெலுங்கில் சாய்பல்லவி - ராணா நடிப்பில் உருவாகியுள்ள விராட பருவம் திரைப்படம் நாளை (ஜூன் 17) வெளியாக இருக்கிறது. வேணு உடுகுலா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சாய்பல்லவி ஒரு நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் பல வருடங்களுக்கு முன் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று முன்பே படக்குழுவினரால் சொல்லப்பட்டு வந்தது.
ஜெய்பீம் படத்தில் அந்த கதை உருவாக காரணமாக இருந்த செங்கனி கதாபாத்திரத்தை எப்படி அந்த படம் வெளியான சமயத்தில் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார்களோ அதேபோல இந்த படத்தில் சாய்பல்லவி ஏற்று நடித்துள்ள வெண்ணிலா என்கிற நிஜ கதாபாத்திரத்தை நேற்று படக்குழுவினர் அறிமுகப்படுத்தினார்கள்.
ஆந்திராவில் உள்ள வாரங்கல் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவரின் வாழ்க்கையில் நடந்த மிக கொடூரமான நிகழ்வுகளை மையப்படுத்தி தான் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் உருவாக காரணமான நிஜ நாயகியான வெண்ணிலாவை படத்தின் நாயகி சாய்பல்லவி நேற்று நேரில் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின்போது நாயகன் ராணா மற்றும் படக்குழுவினர் ஆகியோரும் உடனிருந்தனர்.




