தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
விராட பர்வம் படத்தில் நடித்து முடித்துள்ள சாய் பல்லவி அடுத்து, கார்கி, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமென நடித்து வருகிறார். இந்த நிலையில் விராட பர்வம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், ‛‛வன்முறை எனக்கு பிடிக்காது. வன்முறை மூலம் சாதிக்க முடியும் என நம்பவில்லை. முடிந்தவரை யாரையும் காயப்படுதாமல் இருக்க வேண்டும். சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அதை மத மோதல்களாக பார்க்கிறோம். சமீபத்தில் மாடுகளை கொன்று ஒரு வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டது, அதன் டிரைவர் முஸ்லிம் என்பதற்காக அவரை அடித்து, கொன்று ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பினர். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இடது சாரி அல்லது வலதுசாரி என யாராக இருந்தாலும் பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். மதங்களைக் கடந்து மனிதர்களாக இருக்க வேண்டும்'' என்றார்.
சாய் பல்லவியின் இந்த கருத்து வைரலாகி வருதுடன் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.