பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு காரில் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதானார். மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அவ்வப்போது பரபரப்பாக நடப்பதும் பின்பு அப்படியே அமுக்கி விடுவதும் கடந்த வருடங்களில் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி இந்த வழக்கில் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் மேலும் இதில் அரசியல் குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை சமீபத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் ஒரு பெண் நீதிபதியை குறிப்பிட்டு இந்த வழக்கு விசாரணையில் அவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் திலீப் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையின் போக்கை மாற்ற முயற்சிப்பதாகவும் அதனால் தற்போது விசாரணை தடம்புரண்டு செல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட நடிகை.