பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு |
மலையாள திரையுலகில் குணசித்திர நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான விஜய்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். தனது படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக விஜய்பாபு பலாத்காரம் செய்து விட்டார் என்று நடிகை புகார் அளித்ததன் பேரில் விஜய்பாபு மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜய்பாபு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளார். அதேசமயம் அவர் அங்கிருந்தபடியே இங்கே முன்ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்.
விஜய்பாபுவின் வழக்கறிஞர் நீதிபதியிடம் விஜய்பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் வியாழன், வெள்ளியில் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதை கேட்ட நீதிபதி முதலில் விஜய்பாபு இந்தியாவுக்கு எப்போது திரும்புகிறார் என்பதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும். அதன்பிறகு அவருக்கு முன்ஜாமீன் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நிபந்தனை விதித்தார். அதேசமயம் இந்த வழக்கில் விஜய்பாபுவுக்கு எப்படியும் முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால் அதற்கு முன்பாகவே அவரை கைது செய்வதற்கு போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனராம்.