முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு காரில் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதானார். மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அவ்வப்போது பரபரப்பாக நடப்பதும் பின்பு அப்படியே அமுக்கி விடுவதும் கடந்த வருடங்களில் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி இந்த வழக்கில் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் மேலும் இதில் அரசியல் குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை சமீபத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் ஒரு பெண் நீதிபதியை குறிப்பிட்டு இந்த வழக்கு விசாரணையில் அவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் திலீப் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையின் போக்கை மாற்ற முயற்சிப்பதாகவும் அதனால் தற்போது விசாரணை தடம்புரண்டு செல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட நடிகை.