'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு காரில் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதானார். மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அவ்வப்போது பரபரப்பாக நடப்பதும் பின்பு அப்படியே அமுக்கி விடுவதும் கடந்த வருடங்களில் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி இந்த வழக்கில் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் மேலும் இதில் அரசியல் குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை சமீபத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் ஒரு பெண் நீதிபதியை குறிப்பிட்டு இந்த வழக்கு விசாரணையில் அவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் திலீப் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையின் போக்கை மாற்ற முயற்சிப்பதாகவும் அதனால் தற்போது விசாரணை தடம்புரண்டு செல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட நடிகை.