'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கொரட்டலா சிவா இயக்கத்தில், சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'ஆச்சார்யா'. சிரஞ்சீவியும், அவரது மகன் ராம்சரணும் இணைந்து நடித்த படம் என்பதால் இப்படம் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்த்தனர். மேலும், ராம்சரண் நடித்து வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் 1000 கோடி வசூலைப் பெற்றதாலும் அவர் நடித்து அடுத்து வெளிவந்த 'ஆச்சார்யா' படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இருப்பினும் அனைத்தும் பொய்யாகிப் போனது.
பிரபாஸ் நடித்து வெளிவந்த பிரம்மாண்டப் படமான 'ராதேஷ்யாம்' பெற்ற பெரிய தோல்வியைப் போல 'ஆச்சார்யா' படமும் படுதோல்வியை அடையும் சூழ்நிலையில் உள்ளதாம். இந்தப் படம் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளது. மொத்தம் 80 கோடி வரை நஷ்டம் வரும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரோ, மெகா ஸ்டாரோ அது பெரிதல்ல, அவர்களே நடித்தாலும் படத்தில் கதை இருக்க வேண்டும் என்று தெலுங்கு ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை பெரிய நடிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.