லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

கொரட்டலா சிவா இயக்கத்தில், சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'ஆச்சார்யா'. சிரஞ்சீவியும், அவரது மகன் ராம்சரணும் இணைந்து நடித்த படம் என்பதால் இப்படம் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்த்தனர். மேலும், ராம்சரண் நடித்து வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் 1000 கோடி வசூலைப் பெற்றதாலும் அவர் நடித்து அடுத்து வெளிவந்த 'ஆச்சார்யா' படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இருப்பினும் அனைத்தும் பொய்யாகிப் போனது.
பிரபாஸ் நடித்து வெளிவந்த பிரம்மாண்டப் படமான 'ராதேஷ்யாம்' பெற்ற பெரிய தோல்வியைப் போல 'ஆச்சார்யா' படமும் படுதோல்வியை அடையும் சூழ்நிலையில் உள்ளதாம். இந்தப் படம் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளது. மொத்தம் 80 கோடி வரை நஷ்டம் வரும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரோ, மெகா ஸ்டாரோ அது பெரிதல்ல, அவர்களே நடித்தாலும் படத்தில் கதை இருக்க வேண்டும் என்று தெலுங்கு ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை பெரிய நடிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.