பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

1985ம் ஆண்டு வெளியான படம் 'சின்ன வீடு'. சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கோர்வையான, கச்சிதமான திரைக்கதையை தன்னுடைய பாணியில் எழுதி, இயக்கி இருந்தார் கே. பாக்யராஜ்.
பொருந்தாத மனைவியை வெறுத்து இன்னொரு பெண்ணை தேடும் ஒரு ஆணின் கதை இது. கோவலன் கண்ணகி கதையின் உல்டா என்றும் சொல்லலாம். தன்னுடைய வருங்கால மனைவி, அழகுப் பதுமையாக இருக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் பாக்யராஜிற்கு குண்டாக இருக்கும் கல்பனாவை திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.
மனைவியை ஒதுக்கி வைத்து வேண்டா வெறுப்பாக குடும்பம் நடத்தும் பாக்யராஜ், பானு என்கிற ஓர் அழகான பெண்ணின் காதலில் விழுகிறார். இதனால் ஏற்படும் உறவுச்சிக்கல்களும், குழப்பங்களும் இறுதியில் எவ்வாறு தீர்கின்றன என்பதை நிறைய காமெடியும் கொஞ்சம் சென்டிமென்ட்டும் கலந்து சொல்லிய படம்.
கிட்டத்தட்ட இதே மாதிரியான கதையை கொண்ட 'கோபுரங்கள் சாய்வதில்லை' படம் இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருந்தது. மனைவியாக வந்த அருக்காணியை (சுஹாசினி) கைவிட்டு மார்டன் பெண்ணான ராதாவோடு மோகன் சுற்றும் கதை.
இந்த படம் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால் 'சின்ன வீ'டு படத்தை இப்போதே ரிலீஸ் செய்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதிய பாக்யராஜ் படம் தயாராகி 6 மாதங்களுக்கு பிறகு படத்தை வெளியிட்டார்.