சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகைகளிலேயே கொஞ்சமும் தயங்காமல் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்லக்கூடியவர் நடிகை பார்வதி. அதனால் தான் நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை இணைத்த விஷயத்தில் மோகன்லாலுடனும், கசபா படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமான கதாபாத்திரத்தில் நடித்தார் என மம்முட்டியுடனும் மோதல் போக்கை கடைபிடித்தார் பார்வதி. இதனாலேயே அவருக்கு மறைமுக ரெட்கார்டு போடப்பட்டு பட வாய்ப்புகளும் குறைந்தன.
இந்தநிலையில் ரசிகர்கள் மட்டுமல்ல, மலையாள திரையுலகமும் ஆச்சர்யப்படும் விதமாக மம்முட்டியுடன் இணைந்து 'புழு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் பார்வதி. தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் மம்முட்டி சோபாவில் சீரியஸாக அமர்ந்திருப்பது போலவும் அவர் எதிரே பார்வதியும் அருகில் ஒரு சிறுவனும் கைகட்டி நின்றிருப்பது போலவும் அவர்களது உருவம் கண்ணாடியில் தெரிவது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வதியின் இத்தனை வருட திரையுலக பயணத்தில் முதன்முதலாக மம்முட்டியுடன் ஒரே பிரேமில் இணைந்து இருப்பது போல வெளியான முதல் புகைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.