ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா- நாகசைதன்யா ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அக்டோபர் 2-ந்தேதி தாங்கள் சட்டப்படி பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், ஊடகங்களில் பலதரப்பட்ட வதந்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நாகசைதன்யாவுடன் தான் இணைந்து வாழ்ந்து வந்த வீட்டில் இப்போதும் சமந்தாவே வாழ்ந்து வருகிறார். அதனால் அங்கிருந்து வெளியேறியுள்ள நாகசைதன்யா தற்போது புதிய பங்களா ஒன்றை வாங்கியிருப்பதாகவும் அங்கு விரைவில் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் ஒரு பங்களா வாங்கினார் நாகசைதன்யா. அதன் கட்டுமான வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அந்த பங்களா தயாரானதும் அதில் நாகசைதன்யா குடியேறுவார் என்றும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.




