‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா- நாகசைதன்யா ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அக்டோபர் 2-ந்தேதி தாங்கள் சட்டப்படி பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், ஊடகங்களில் பலதரப்பட்ட வதந்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நாகசைதன்யாவுடன் தான் இணைந்து வாழ்ந்து வந்த வீட்டில் இப்போதும் சமந்தாவே வாழ்ந்து வருகிறார். அதனால் அங்கிருந்து வெளியேறியுள்ள நாகசைதன்யா தற்போது புதிய பங்களா ஒன்றை வாங்கியிருப்பதாகவும் அங்கு விரைவில் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் ஒரு பங்களா வாங்கினார் நாகசைதன்யா. அதன் கட்டுமான வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அந்த பங்களா தயாரானதும் அதில் நாகசைதன்யா குடியேறுவார் என்றும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.




