''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தெலுங்கு சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடிக்கும் இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து நடிகை சார்மி தயாரிக்கிறார். இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறதாம்..
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவாவுக்கு வருகை தந்த நடிகர் பாலகிருஷ்ணா சர்ப்ரைஸாக விஜய் தேவரகொண்டாவின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார்.
தற்போது அகண்டா படத்தில் நடித்து முடித்துவிட்ட பாலகிருஷ்ணா ஓய்வுக்காக கோவா வந்தபோது, லைகர் படப்பிடிப்பு நடப்பது குறித்து கேள்விப்பட்டு அங்கு விசிட் அடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது பாலகிருஷ்ணா தனது அகண்டா' படத்திற்காக இளைஞர்களை கவர, செய்துள்ள விளம்பர யுக்திகளில் ஒன்று என்றும் சிலர் கூறி வருகின்றனர்.