பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தெலுங்கு சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடிக்கும் இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து நடிகை சார்மி தயாரிக்கிறார். இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறதாம்..
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவாவுக்கு வருகை தந்த நடிகர் பாலகிருஷ்ணா சர்ப்ரைஸாக விஜய் தேவரகொண்டாவின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார்.
தற்போது அகண்டா படத்தில் நடித்து முடித்துவிட்ட பாலகிருஷ்ணா ஓய்வுக்காக கோவா வந்தபோது, லைகர் படப்பிடிப்பு நடப்பது குறித்து கேள்விப்பட்டு அங்கு விசிட் அடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது பாலகிருஷ்ணா தனது அகண்டா' படத்திற்காக இளைஞர்களை கவர, செய்துள்ள விளம்பர யுக்திகளில் ஒன்று என்றும் சிலர் கூறி வருகின்றனர்.