விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
தெலுங்கு சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடிக்கும் இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து நடிகை சார்மி தயாரிக்கிறார். இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறதாம்..
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவாவுக்கு வருகை தந்த நடிகர் பாலகிருஷ்ணா சர்ப்ரைஸாக விஜய் தேவரகொண்டாவின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார்.
தற்போது அகண்டா படத்தில் நடித்து முடித்துவிட்ட பாலகிருஷ்ணா ஓய்வுக்காக கோவா வந்தபோது, லைகர் படப்பிடிப்பு நடப்பது குறித்து கேள்விப்பட்டு அங்கு விசிட் அடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது பாலகிருஷ்ணா தனது அகண்டா' படத்திற்காக இளைஞர்களை கவர, செய்துள்ள விளம்பர யுக்திகளில் ஒன்று என்றும் சிலர் கூறி வருகின்றனர்.