ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த வருடம் கொரோனா தாக்கம் உருவாவதற்கு முன்பாகவே வேணு உடுகுலா என்பவர் இயக்கத்தில் பீரியட் படமாக தயாராகி விட்டது 'விராட பர்வம்'.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடிக்க, நக்ஸலைட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய்பல்லவி. மேலும் சீனியர்களான பிரியாமணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடித்துள்ள இந்தப்படத்திற்கு, கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைவதற்கு முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்தப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக ஒடிடி தரப்பில் நல்ல விலை தருவதற்கு நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதனால் இந்தப்படம் கூடிய விரைவில் ஒடிடியில் வெளியாகலாம் என்றும் ஒரு செய்தி கடந்த நாட்களாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா, விராட பர்வம்' படம் ஒடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை. நிலைமை ஓரளவு சீரானதும், நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார்.