சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
சலார் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாக வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதேபோல நடிகர் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து, தான் நடித்து வந்த வார் 2 படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக பிரசாந்த் நீல் படத்தில் இணைய இருக்கிறார். அவருக்கும் தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் இருந்தாலும் பிரசாந்த் நீல் படத்தில் தான் முதலில் கவனம் செலுத்த இருக்கிறார்.
இந்த படத்திற்கு டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ், பிரசாந்த் நீல் பற்றி கூறும்போது இந்த படம் குறித்து சில விஷயங்களை பேச்சு வாக்கில் வெளியிட்டு விட்டார். அதாவது இந்த படத்திற்கு டிராகன் தான் டைட்டில் என்று கூறியுள்ள பிரித்விராஜ், மலையாள நடிகர் டொவினோ தாமஸும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவலையும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் பிஜூமேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்கிற தகவல் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் டொவினோ தாமஸ்.