எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

சலார் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாக வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதேபோல நடிகர் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து, தான் நடித்து வந்த வார் 2 படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக பிரசாந்த் நீல் படத்தில் இணைய இருக்கிறார். அவருக்கும் தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் இருந்தாலும் பிரசாந்த் நீல் படத்தில் தான் முதலில் கவனம் செலுத்த இருக்கிறார்.
இந்த படத்திற்கு டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ், பிரசாந்த் நீல் பற்றி கூறும்போது இந்த படம் குறித்து சில விஷயங்களை பேச்சு வாக்கில் வெளியிட்டு விட்டார். அதாவது இந்த படத்திற்கு டிராகன் தான் டைட்டில் என்று கூறியுள்ள பிரித்விராஜ், மலையாள நடிகர் டொவினோ தாமஸும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவலையும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் பிஜூமேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்கிற தகவல் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் டொவினோ தாமஸ்.