‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

ஹிந்தியில் அமீர்கானின் மகன் ஜுனைத்கானுடன் 'ஏக் தின்' என்ற படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, அதையடுத்து 'ராமாயணா' படத்தில் சீதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் அவர் நடித்துள்ள சீதாதேவி கதாபாத்திரம் தற்போது வட இந்திய நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த வேடத்தில் அவர் நடிப்பது ராமாயணா காவியத்தை அவமதிப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். அது மட்டுமின்றி இதே படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் போன்ற நடிகைகளுடன் சாய்பல்லவியை ஒப்பிட்டு எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ள இந்த படம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் வெளியானதை அடுத்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி எதிர்மறையான கருத்துக்கள் வெளியான போதும் அதற்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் ராமாயணாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தொடங்க தயாராகி வருகிறார். அதோடு இதுவரை தான் நடித்த படங்களை விட இந்த படத்திற்காக கூடுதலான அர்ப்பணிப்பை சாய் பல்லவி செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.