மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சலார் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாக வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதேபோல நடிகர் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து, தான் நடித்து வந்த வார் 2 படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக பிரசாந்த் நீல் படத்தில் இணைய இருக்கிறார். அவருக்கும் தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் இருந்தாலும் பிரசாந்த் நீல் படத்தில் தான் முதலில் கவனம் செலுத்த இருக்கிறார்.
இந்த படத்திற்கு டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ், பிரசாந்த் நீல் பற்றி கூறும்போது இந்த படம் குறித்து சில விஷயங்களை பேச்சு வாக்கில் வெளியிட்டு விட்டார். அதாவது இந்த படத்திற்கு டிராகன் தான் டைட்டில் என்று கூறியுள்ள பிரித்விராஜ், மலையாள நடிகர் டொவினோ தாமஸும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவலையும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் பிஜூமேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்கிற தகவல் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் டொவினோ தாமஸ்.