விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கிய கன்னட படம் யுவரத்னா. இந்த திரைப்படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், புனீத் ராஜ்குமார், சாயீஷா, சோனு கௌடா, தனஞ்சயா, மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கல்வி அமைப்பை தனியார்மயமாக்கும் அரசியல் தொடர்புகளால் மூடப்படும் நிலைக்குச் செல்லும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியைச் சுற்றி யுவராத்னாவின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வர் தனியார் மயமாக்கலுக்கு எதிராகப் போராடுகிறார். ராஷ்ட்ரகுடா பல்கலைக்கழகத்தில் ஒரு பொறியியல் மாணவனாகச் சேரும் அர்ஜூன் அதாவது புனீத் ராஜ்குமார், அவரது இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? அவர்களது முயற்சியில் அவர்கள் வெற்றி காணுவார்களா? என்பதுதான் படத்தின் கதை.
யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது. திரையரங்குளில் வெளியாக நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் ஓடிடியில் வெளியானது கன்னட தியேட்டர் அதிபர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.