மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கேரள அரசின் சார்பில் மலையாள திரை உலகில் கடந்த பல வருடங்களாக 'சித்ராஞ்சலி ஸ்டுடியோ' திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த ஸ்டுடியோவை நவீனமயமாக்க புதுப்பிக்கப்படும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று இதன் துவக்க விழா அரசு சார்பில் நடைபெற்றது. ஆனால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரும் விதமாக மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் என எந்த ஒரு சங்கத்தை சேர்ந்தவர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தி அவை நிறைவேற்றப்படாத காரணத்தால் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக மலையாள திரையுலகம் அறிவித்தது. அதன் பிறகு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு அளித்த வாக்குறுதியை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டது. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் திரையுலகம் சார்பான கோரிக்கைகள் எதையும் தீர்க்கும் விதமாக அறிவிப்புகள் இல்லை. இதனால் தங்களை ஒதுக்கும் கேரள அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகத்தான் தற்போது இந்த சித்ராஞ்சலி ஸ்டுடியோ திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் மலையாள சங்கங்கள் புறக்கணித்துள்ளன என்கிற தகவல் வெளியாகி உள்ளது.