'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது நடிகை பார்வதி விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. மம்முட்டி 'கசபா' என்கிற படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடித்திருந்தார் என சில வருடங்களுக்கு முன் குற்றம் சாட்டிய பார்வதி, மம்முட்டி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். அதனால் அவரது இரண்டு படங்களை புறக்கணித்து ஓடவிடாமல் செய்தனர் ரசிகர்கள். அதேபோல மம்முட்டியை எதிர்த்ததால் பட வாய்ப்புகளும் பார்வதிக்கு குறைந்து போனது.
இந்தநிலையில் தான், ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக புழு என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார் பார்வதி. அறிமுக பெண் இயக்குனர் ரதீனா இந்தப்படத்தை இயக்குகிறார்.. இந்தப்படம் பற்றி சமீபத்தில் பார்வதி கூறும்போது, “இதில் மம்முட்டி நடிக்க இருக்கும் கதாபாத்திரம் இதுவரை அவர் ஏற்று நடித்திராத ஒன்று. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஷாக் கொடுக்கும் விதமாக அவரது கதாபாத்திரம் இருக்கும்” என்று கூறி மம்முட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளார் பார்வதி..