பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சகோதரரும் நடிகருமான கல்யாண் ராமின் சொந்த தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இப்படத்தை இயக்க இயக்குனர்கள் வம்சி, பூரி ஜெகன்நாத் போன்ற பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இயக்குனர் பாபி, ஜூனியர் என்.டி.ஆரின் 27வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை கல்யாண் ராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் 27வது படத்தை இயக்குனர் பாபி இயக்கத்தில் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தான் தயாரிக்கவுள்ளதாக கல்யாண் ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஐ.எஸ்.எம் படத்தில் நடித்த கல்யாண் ராம் அப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் இறங்கிவிட்டார். பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த சர்தார் கபார் சிங் திரைப்படத்தை இயக்குனர் பாபி அண்மையில் இயக்கினார். அப்படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆருக்காக மீண்டும் ஆக்ஷன் கதையை பாபி தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.