பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள நடிகர் திலீப்பை அதிரடியாக மறுமணம் செய்துகொண்ட கையோடு ஹனிமூன் சென்று திரும்பிய காவ்யா மாதவன், சமீபத்தில் தான் தனது திருமணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். திலீப்பை திருமணம் செய்துகொள்ள தனக்கும் சில நியாயமான காரணங்கள் இருந்தன என்கிறார் காவ்யா மாதவன்.. குறிப்பாக தாங்கள் இருவரும் திருமணம் செய்யவேண்டும் என்பதில் மற்ற யாரையும் விட தங்களது ரசிகர்கள் தான் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்கள் என்றும் கூறியுள்ளார் காவ்யா மாதவன்..
இதுநாள் வரை எங்களது மனதில் திருமணம் குறித்த எந்த எண்ணமும் இல்லாத நிலையில் ஊடகங்களும் சோஷியல் மீடியாவில் உள்ள பலரும் தான், அப்படி ஒரு தோற்றத்தை உண்டாக்கிவிட்டனர்.. மீண்டும் ஒரு திருமணம் குறித்து நான் ஆலோசித்தபோது அது எனக்கு உற்ற நண்பராக இருக்கும் திலீப்பாக இருக்க கூடாது என்கிற எண்ணமே சமீபத்தில் தான் வந்தது.. இந்த திருமணமே ஒரு வார காலத்திற்குள் பேசி முடிக்கப்பட்ட ஒன்றுதான்.. இதிலும் கூட ஜாதகம் எல்லாம் பார்த்து தான் நடத்தியுள்ளோம்..” என கூறியுள்ளார் காவ்யா மாதவன்