சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை |
கேரள மக்களில் பெரும்பாலோர் முருக பக்தர்கள். குறிப்பாக பழனி முருக பக்தர்கள். கேரளாவின் அருகில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி என்ற ஊரில் அமைந்துள்ளது. உயர்ந்த மலைகளை பின்னணியாக கொண்டு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரபலம்.
இந்த கோவிலுக்கு நேற்று மோகன்லால் திடீரென வருகை தந்தார். நேராக கோவிலுக்கு சென்ற அவர் முருகனை வழிபட்டு தங்கவேலை காணிக்கையாக செலுத்தினார். எம்புரான், தொடரும் படங்களின் வெற்றி, மிகப்பெரிய வசூல் இவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்க வேல் காணிக்கையாக வழங்கி உள்ளார்.
'தொடரும்' படத்தின் பாடல் ஒன்றில் 'திருமலை முருகனுக்கு அரோகரா' என்ற வரி இடம் பெற்றிருந்தது. அந்த வரியை கேட்டதுமே திருமலை முருகனுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று மோகன்லால் பட வெளியீட்டுக்கு முன்பே முடிவு செய்திருந்தாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.