பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது தெலுங்கில் உருவாகியுள்ள கண்ணப்பா. தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் ஆன மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு இந்த படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். புராண படமாக உருவாகியுள்ள இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகர்கள் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் மோகன்லால், பிரபாஸ் ஆகியோரின் பங்களிப்பு குறித்து சமீபத்தில் விஷ்ணு மஞ்சு கூறும்போது, “மோகன்லால், பிரபாஸ் இருவரிடமுமே இந்த கதை பற்றி, அவர்களது கதாபாத்திரம் பற்றி நான் கூறியபோது மறுவார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டனர். அதேசமயம் ஒவ்வொரு முறையும் அவர்களது சம்பளத்தை பற்றி பேச முயற்சிக்கும் போதெல்லாம் இருவருமே என்னை திட்டினார்கள். அதில் மோகன்லால், நான் பார்க்க வளர்ந்த பையன் நீ.. இப்போது எனக்கே சம்பளம் கொடுக்கிறாயா என்று கேட்டார்.
பிரபாஸோ இன்னும் ஒரு படி மேலே போய் அடிக்கடி இதுபோல சம்பளம் பற்றி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தால் கொன்று விடுவேன் என்று செல்லமாக மிரட்டினார். அது மட்டுமல்ல, நடிகர் அக்ஷய் குமார் கூட அவர் தற்போது தான் வாங்கும் சம்பளத் தொகையில் மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொண்டு குறைந்த அளவே பெற்றுக் கொண்டார். இவை அனைத்தும் இந்த படத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், என் தந்தை மீது அவர்கள் வைத்துள்ள மதிப்பையும் காட்டுகிறது” என்று நெகிழ்ந்து போய் கூறியுள்ளார்.