சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது தெலுங்கில் உருவாகியுள்ள கண்ணப்பா. தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் ஆன மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு இந்த படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். புராண படமாக உருவாகியுள்ள இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகர்கள் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் மோகன்லால், பிரபாஸ் ஆகியோரின் பங்களிப்பு குறித்து சமீபத்தில் விஷ்ணு மஞ்சு கூறும்போது, “மோகன்லால், பிரபாஸ் இருவரிடமுமே இந்த கதை பற்றி, அவர்களது கதாபாத்திரம் பற்றி நான் கூறியபோது மறுவார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டனர். அதேசமயம் ஒவ்வொரு முறையும் அவர்களது சம்பளத்தை பற்றி பேச முயற்சிக்கும் போதெல்லாம் இருவருமே என்னை திட்டினார்கள். அதில் மோகன்லால், நான் பார்க்க வளர்ந்த பையன் நீ.. இப்போது எனக்கே சம்பளம் கொடுக்கிறாயா என்று கேட்டார்.
பிரபாஸோ இன்னும் ஒரு படி மேலே போய் அடிக்கடி இதுபோல சம்பளம் பற்றி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தால் கொன்று விடுவேன் என்று செல்லமாக மிரட்டினார். அது மட்டுமல்ல, நடிகர் அக்ஷய் குமார் கூட அவர் தற்போது தான் வாங்கும் சம்பளத் தொகையில் மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொண்டு குறைந்த அளவே பெற்றுக் கொண்டார். இவை அனைத்தும் இந்த படத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், என் தந்தை மீது அவர்கள் வைத்துள்ள மதிப்பையும் காட்டுகிறது” என்று நெகிழ்ந்து போய் கூறியுள்ளார்.




