வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைக்கோ கிரைம் திரில்லர் படமாக வெளியான பாரன்சிக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முழுக்க முழுக்க பாரன்சிக் டிபார்ட்மெண்ட்டை மையப்படுத்தி உருவான இந்த படத்தை அகில்பால் - அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது அவர்கள் ஐடென்டி என்கிற படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்திலும் டொவினோ தாமஸ் தான் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளார் நடிகை திரிஷா. நடிகர் வினய் ராய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிஷா, அதன்பிறகு நடிகர் வினய் ராய் இருவரும் இந்த படத்தில் தங்களது போர்ஷனை நடித்து முடித்தனர். கிட்டத்தட்ட 130 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது நாயகன் டொவினோ தாமஸும் இந்த படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்துள்ளார். அதேசமயம் இன்னும் சில நாட்கள் வேறு சில காட்சிகளை இயக்குனர்கள் படமாக்க இருக்கிறார்கள் என்றும் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க இருக்கிறது என்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.




