இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புஷ்பா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதன் இரண்டாம் பாகம் புஷ்பா 2 என்கிற பெயரில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே மலையாளத்தில் அல்லு அர்ஜுனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த புஷ்பா படம் மூலம் தென்னிந்தியா மட்டும் இல்லாது இந்தியிலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
கடந்த 2003ல் கங்கோத்ரி என்கிற படம் மூலம் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக அறிமுகமானாலும் அதற்கு அடுத்த வருடம் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா திரைப்படம் தான் அல்லு அர்ஜுனின் திரை உலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் சுகுமாருக்கும் அதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்திற்காக முதலில் சுகுமார் அணுகியது ரவி தேஜா மற்றும் பிரபாஸை தான். ரவி தேஜாவிற்கு கதை பிடித்திருந்தாலும் வேறு சில படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் பிரபாஸ் இந்த படத்தின் கதையை கேட்டதும் இந்த கதை தனக்கு செட் ஆகுமா? என்பது போன்று சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
அந்த சமயத்தில் தான் ஒரு படத்தின் பிரிவியூ காட்சியின் போது அல்லு அர்ஜுனை சந்தித்த சுகுமார் அவரது நடை உடை பாவனைகளை கவனித்து தனது ஆர்யா படத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் என தேர்வு செய்தார். அவரது தேர்வு சரி என நிரூபிப்பது போல ஆர்யாவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி 20 வருடம் கடந்துவிட்ட நிலையில் தற்போதும் அல்லு அர்ஜுன்-சுகுமார் கூட்டணி புஷ்பா மூலம் வெற்றிகரமாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.




