பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? |
தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புஷ்பா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதன் இரண்டாம் பாகம் புஷ்பா 2 என்கிற பெயரில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே மலையாளத்தில் அல்லு அர்ஜுனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த புஷ்பா படம் மூலம் தென்னிந்தியா மட்டும் இல்லாது இந்தியிலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
கடந்த 2003ல் கங்கோத்ரி என்கிற படம் மூலம் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக அறிமுகமானாலும் அதற்கு அடுத்த வருடம் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா திரைப்படம் தான் அல்லு அர்ஜுனின் திரை உலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் சுகுமாருக்கும் அதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்திற்காக முதலில் சுகுமார் அணுகியது ரவி தேஜா மற்றும் பிரபாஸை தான். ரவி தேஜாவிற்கு கதை பிடித்திருந்தாலும் வேறு சில படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் பிரபாஸ் இந்த படத்தின் கதையை கேட்டதும் இந்த கதை தனக்கு செட் ஆகுமா? என்பது போன்று சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
அந்த சமயத்தில் தான் ஒரு படத்தின் பிரிவியூ காட்சியின் போது அல்லு அர்ஜுனை சந்தித்த சுகுமார் அவரது நடை உடை பாவனைகளை கவனித்து தனது ஆர்யா படத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் என தேர்வு செய்தார். அவரது தேர்வு சரி என நிரூபிப்பது போல ஆர்யாவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி 20 வருடம் கடந்துவிட்ட நிலையில் தற்போதும் அல்லு அர்ஜுன்-சுகுமார் கூட்டணி புஷ்பா மூலம் வெற்றிகரமாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.