கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு எல்லாம் தவறாமல் இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் தமன். ஒவ்வொரு ஹீரோவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒவ்வொரு படத்திலும் ஒரு ஹிட் பாடலாவது கொடுத்து விடுவதால் பிஸியாக இசையமைத்து வரும் தமன், தற்போது பிரபாஸ் நடித்து வரும் ராஜா ஸாப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். பொதுவாக பாடல்களை உருவாக்குவதற்காக வழக்கமாக பணியாற்றும் ஐதராபாத் சுற்றுப்பகுதி இடங்களுக்கோ அல்லது துபாய் போன்ற வெளிநாடுகளுக்கோ செல்வதுதான் தமனின் வழக்கம்.
ஆனால் இந்த முறை பாடல் கம்போசிங்கிற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ளாராம் தமன். இது தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது ரசிகர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் மாருதி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நித்தி அகர்வால், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர் என்பதும் ராதே ஷ்யாம் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸ் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.