புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மலையாளத்தில் மோகன்லால் நடித்த தாண்டவம், பிரித்விராஜ் நடித்த ‛சக்ரம்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஜானி சக்காரியா. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திலீப், நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ‛பாடிகார்ட்' படத்தை தயாரித்தவரும் இவர்தான். தற்போது பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையை சேர்ந்த துவாரக் என்பவரிடம் பட தயாரிப்புக்காக இரண்டரை கோடி ரூபாய் வாங்கி இருந்த ஜானி சக்காரியா, அதில் வெறும் 30 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து துபாய் செல்வதற்காக கொச்சின் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.