'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் |

பிரபல கன்னட நடிகர் சேத்தன் சந்திரா. பியூசி, பிரேமிசம், ராஜதானி, பிளஸ், பசார், மெலடி டிராமா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் கக்கலிபுரா பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
நேற்று அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு தனது தாயாருடன் சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாயாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சேத்தன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேத்தன் சந்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ''ஒருவர் என்னிடம் கொள்ளையடிக்க முயன்றார். திடீரென்று 20 பேர் என்னை சூழ்ந்தனர். அவர்கள் என்னை அடித்து கடுமையாக தாக்கினார்கள். மூக்கிலும் குத்தினார்கள். காரையும் சேதப்படுத்தினர். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.