எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
2024ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றுள்ளது. சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ் ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் தவறாமல் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஓட்டை செலுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
இதில் ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வரும் நடிகர் பவன் கல்யாண் பீத்தாபுரம் என்கிற தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று மங்களகிரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பவன் கல்யாண் அங்கிருந்து காரில் சென்று ஓட்டளித்தார்.
இதேபோல இயக்குனர் ராஜமவுலி வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் விமான நிலையத்திலிருந்து நேராக வாக்குச்சாவடிக்கு தனது மனைவி மற்றும் மகன் கார்த்திகேயாவுடன் வந்து தனது ஓட்டை செலுத்தினார். அதேபோல நடிகர் பாலகிருஷ்ணா மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தினாலும் ஒரு கட்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக தோளில் துண்டு அணிந்திருந்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.