ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

2024ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றுள்ளது. சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ் ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் தவறாமல் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஓட்டை செலுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
இதில் ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வரும் நடிகர் பவன் கல்யாண் பீத்தாபுரம் என்கிற தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று மங்களகிரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பவன் கல்யாண் அங்கிருந்து காரில் சென்று ஓட்டளித்தார்.
இதேபோல இயக்குனர் ராஜமவுலி வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் விமான நிலையத்திலிருந்து நேராக வாக்குச்சாவடிக்கு தனது மனைவி மற்றும் மகன் கார்த்திகேயாவுடன் வந்து தனது ஓட்டை செலுத்தினார். அதேபோல நடிகர் பாலகிருஷ்ணா மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தினாலும் ஒரு கட்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக தோளில் துண்டு அணிந்திருந்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.




