'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிப்பதோடு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு மற்றும் பா.ஜ.விற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து பண்டிகைகள் குறித்தும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் சனாதன தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், 'சனாதன தர்மம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.