7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

கடந்த இரண்டு தினங்களாக மகேஷ்பாபு புதிதாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். இந்த நிலையில் தெலங்கானாவில் உள்ள கைத்தறி நெசவு மேற்கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் அவர்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் விதமாகவும் மகேஷ்பாபு தன் மனைவியுடன் சேர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள நாராயணன்பேட் கிராமத்தைச் சேர்ந்த பெண் நெசவாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பதற்காக ஆருண்யா என்கிற ஆன்லைன் விற்பனை தளத்தை துவங்கியுள்ளனர். மகேஷ்பாபு இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, கிராமத்து பெண்களின் திறமையை, குறிப்பாக நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் திறமையையும் உழைப்பையும் வெளிக்கொண்டு வந்து சுயதொழில் மூலமாக அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் இந்த தளத்திற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல தனது மனைவி நம்ரதா சிரோத்கருடன் சம்பந்தப்பட்ட நெசவாளர் பெண்களையும் இந்த விற்பனை தளத்தின் பொறுப்பாளர்களையும் நேரிலேயே சந்தித்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.