ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் ரசிகர்களுக்கு தனுஷ் நடித்த 'சீடன்' படம் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். அதுமட்டுமல்ல பாகமதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்த இவர், தற்போது யசோதா என்கிற படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் உருவாகி வரும் மாளிகைப்புரம் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சுவாமி ஐயப்பனின் பக்தையான மாளிகைப்புரத்து அம்மனை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.
இதில் அய்யப்ப பக்தையாக சிறுமி தேவானந்தா என்பவர் நடிக்கிறார். இந்த படத்தை விஷ்ணு சசி சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். அமலாபால் நடித்த கடாவர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளைதான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது எருமேலியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாளிகைப்புறம் குறித்த கதையாக இது உருவாகி வருவதால் இதுபற்றி அறிந்து கொள்ளவும் படப்பிடிப்பு தளத்தை பார்வையிடவும் பந்தள ராஜ குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளான தீபா வர்மா, அருண் வர்மா மற்றும் சுதின் கோபிநாத் ஆகியோர் மாளிகைப்புறம் படத்தின் துவக்க விழா பூஜையில் கலந்து கொள்வதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தனர். அங்கே உன்னி முகுந்தன் மற்றும் சிறுமி தேவானந்தா உள்ளிட்ட படக்குழுவினருடன் நீண்ட நேரம் உரையாடி விட்டு பின்னர் விடைபெற்றுச் சென்றனர். பந்தள ராஜா குடும்பமே தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வந்ததால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.