நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிப்பு, டைரக்ஷன் என பிஸியாக இருக்கும் பிரித்விராஜ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு 'காளியன்' என்கிற படத்தில் நடிக்கப் போவதாக தானே முன்வந்து பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டார். 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரன் 'குஞ்சிரக்கோட்டு காளி' என்கிற கேரக்டரில் தான் பிரித்விராஜ் நடிக்கிறார் .
களரி பயிர்சிக்கலையில் குருவாக விளங்கும் மகேஷ் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஆனாலும் அறிவிப்பு வெளியாகி நான்கு வருடங்கள் கழித்து தற்போது இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ள நிலையில் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளராக ரவி பஸ்ரூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் படத்திற்கு இசையமைத்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..