கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
கடந்த 20 வருடங்களாக திரையுலகில் நடிகைகளின் நம்பர் ஒன் இடத்தில் நின்று தனது ஆளுமையை செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் முதல்முதலாக அறிமுகமானது மலையாளத்தில் மனசினக்கரே என்கிற படத்தில் தான். ஜெயராம் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியிருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய நிகழ்வு பற்றி இயக்குனர் சத்யன் அந்திக்காடு பேசும்போது, “அந்த படத்திற்காக புதுமுகம் ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது நகை விளம்பரத்தில் நடித்த நயன்தாராவின் புகைப்படத்தை பத்திரிக்கை ஒன்றில் பார்த்தேன். அதன் பிறகு அவரை தொடர்புகொண்டு இந்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தேன். ஆரம்பத்தில் அவர் ஒப்புக்கொண்டாலும் பின்னர் படத்தில் நடிக்கவில்லை என்று கூறி பின்வாங்கினார்..
காரணம் அவரது உறவினர்கள் தரப்பில் இருந்து அவர் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய எதிர்ப்பு கிளம்பியது தான். அதேசமயம் நயன்தாராவின் பெற்றோர் தனது மகள் சினிமாவில் நடிப்பதற்கு எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. அதனால் நயன்தாராவை உற்சாகமூட்டி இந்த படத்தில் நடிக்க வைத்தேன். டயானா என்கிற பெயரையும் மாற்றி சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் சூட்டினேன்” என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் சத்யன் அந்திக்காடு