பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

மலையாள திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் இருமுகம் கொண்டவர் விஜய்பாபு. சமீபத்தில் இவரது மூன்றாம் முகம் வெளிப்படும் விதமாக நடிகை ஒருவர் இவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். இதனடிப்படையில் போலீசார் விஜய்பாபு மீது வழக்கு பதிந்துள்ளனர். தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்துள்ளார் என சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியதாக இன்னொரு வழக்கும் அவர் மீது பதியப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்பாபு, தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதற்காக துபாய்க்கு பறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் விஜய்பாபுவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்களது அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்த கோரி அனுப்பப்படுவது தான் இந்த புளூ கார்னர் நோட்டீஸ். இருந்தாலும் தற்போது கோடைக்காலம் என்பதால் நீதிமன்ற விடுமுறை காரணமாக விஜய்பாபுவுக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் முன்ஜாமீன் பெற்ற பிறகே கேரளாவுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.