'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் இருமுகம் கொண்டவர் விஜய்பாபு. சமீபத்தில் இவரது மூன்றாம் முகம் வெளிப்படும் விதமாக நடிகை ஒருவர் இவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். இதனடிப்படையில் போலீசார் விஜய்பாபு மீது வழக்கு பதிந்துள்ளனர். தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்துள்ளார் என சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியதாக இன்னொரு வழக்கும் அவர் மீது பதியப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்பாபு, தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதற்காக துபாய்க்கு பறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் விஜய்பாபுவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்களது அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்த கோரி அனுப்பப்படுவது தான் இந்த புளூ கார்னர் நோட்டீஸ். இருந்தாலும் தற்போது கோடைக்காலம் என்பதால் நீதிமன்ற விடுமுறை காரணமாக விஜய்பாபுவுக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் முன்ஜாமீன் பெற்ற பிறகே கேரளாவுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.