தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தை இயக்கி வெற்றிப்படமாக மாற்றியதுடன் அதன் இரண்டாம் பாகத்தையும் அதே அளவு விறுவிறுப்புடன் இயக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை மோகன்லாலுக்கு கொடுத்தவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். திரிஷ்யம்-2 படத்தை இயக்குவதற்கு முன்னதாக மோகன்லாலை வைத்து ராம் என்கிற படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப், கொரோனா தாக்கம் காரணமாக அதன் படப்பிடிப்பை துவங்கிய சில நாட்களிலேயே நிறுத்திவிட்டார்.
திரிஷ்யம்-2 வெளியாகி முடிந்ததும் மீண்டும் மோகன்லாலை வைத்து டுவல்த் மேல் என்கிற புதிய படத்தை துவங்கிய ஜீத்து ஜோசப் அதையும் குறுகிய காலத்தில் முடித்துவிட்டார். ஒரு பக்கம் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனித்துக் கொண்டே இன்னொரு பக்கம் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். இ
ந்த நிலையில் டுவல்த் மேன் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் ரிலீசுக்கு தயார் நிலையில் படம் இருப்பதாகவும் கூறியுள்ள ஜீத்து ஜோசப் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.