இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |

தமிழில் ஆளவந்தான், சாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். ஒருபக்கம் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானாலும் அதிலிருந்த போராடி மீண்ட ரவீணா, தற்போதும் படங்களில் தொடர்பு நடித்து வருகிறார். தற்போது கேஜிஎப் 2 படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினைவூட்டும் விதமாக ராமிகா சென் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவீணா டாண்டன்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தை மலையாளத்தில் வெளியிடும் நடிகர் பிரித்விராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விரைவில் வெளியாக இருக்கும் அவரது ஜன கண மன படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மம்தா மோகன்தாசும் அவருடன் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்வில் நடிகை ரவீனா டாண்டனை சந்தித்த மம்தா மோகன்தாஸ் ஒரு ரசிகையாக மாறிப்போய் அவருடன் சந்தோசமாக உரையாடியதுடன் அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.