சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'நா பேரு சூர்யா.. நா இல்லு இந்தியா' என்கிற படம் வெளியானது. இந்தப்படம் மலையாளத்திலும் 'எண்டே பேரு சூர்யா எண்டே வீடு இந்தியா' என்கிற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜூன் படங்களுக்கு மட்டுமே கேரளாவில் மவுசு அதிகம்..
இந்தநிலையில் சினிமா விமர்சகரான அபர்ணா பிரசாந்தி என்பவர் இந்தப்படத்தை பார்த்துவிட்டு “படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தலைவலிக்க ஆரம்பித்து விட்டது” என சோஷியல் மீடியாவில் கருத்தை பதிவிட்டிருந்தார்..
இதனால் கோபமான அல்லு அர்ஜுனின் கேரள ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அபர்ணா பிரசாந்தி மீது கண்டன கணைகளை தொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து தன்மீது கொலை மற்றும் கற்பழிப்பு அச்சுறுத்தல் விடுத்ததாக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அபர்ணா பிரசாந்தி.