ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'நா பேரு சூர்யா.. நா இல்லு இந்தியா' என்கிற படம் வெளியானது. இந்தப்படம் மலையாளத்திலும் 'எண்டே பேரு சூர்யா எண்டே வீடு இந்தியா' என்கிற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜூன் படங்களுக்கு மட்டுமே கேரளாவில் மவுசு அதிகம்..
இந்தநிலையில் சினிமா விமர்சகரான அபர்ணா பிரசாந்தி என்பவர் இந்தப்படத்தை பார்த்துவிட்டு “படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தலைவலிக்க ஆரம்பித்து விட்டது” என சோஷியல் மீடியாவில் கருத்தை பதிவிட்டிருந்தார்..
இதனால் கோபமான அல்லு அர்ஜுனின் கேரள ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அபர்ணா பிரசாந்தி மீது கண்டன கணைகளை தொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து தன்மீது கொலை மற்றும் கற்பழிப்பு அச்சுறுத்தல் விடுத்ததாக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அபர்ணா பிரசாந்தி.