என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'நா பேரு சூர்யா.. நா இல்லு இந்தியா' என்கிற படம் வெளியானது. இந்தப்படம் மலையாளத்திலும் 'எண்டே பேரு சூர்யா எண்டே வீடு இந்தியா' என்கிற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜூன் படங்களுக்கு மட்டுமே கேரளாவில் மவுசு அதிகம்..
இந்தநிலையில் சினிமா விமர்சகரான அபர்ணா பிரசாந்தி என்பவர் இந்தப்படத்தை பார்த்துவிட்டு “படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தலைவலிக்க ஆரம்பித்து விட்டது” என சோஷியல் மீடியாவில் கருத்தை பதிவிட்டிருந்தார்..
இதனால் கோபமான அல்லு அர்ஜுனின் கேரள ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அபர்ணா பிரசாந்தி மீது கண்டன கணைகளை தொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து தன்மீது கொலை மற்றும் கற்பழிப்பு அச்சுறுத்தல் விடுத்ததாக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அபர்ணா பிரசாந்தி.