தீபிகா படுகோனேவை பிரிகிறாரா ரன்வீர் சிங் : பாலிவுட்டில் பரபரப்பு | விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? | ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி | சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ் | பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் | முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல் | போலி கணக்கு துவங்கி ட்ரோல்களை சமாளித்த அனேகன் பட நாயகி | மனைவியுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் யேசுதாஸ் | சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சின்ன பையன் யார் தெரியுமா...? | டன் கணக்கில் அன்பு, ஆசீர்வாதம் : ராய் லட்சுமி |
மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே படம் இயக்கும் எண்ணம் அவரது மனதில் இருந்தது. அதற்கு உயிர் கொடுக்கும் விதமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 'பரோஸ்' என்கிற வரலாற்று படத்தை இயக்கத் துவங்கினார் மோகன்லால். இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மோகன்லால். அவருக்கு இயக்குனர் சங்க உறுப்பினர் அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர் எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் அதை பகிர்ந்து கொள்வாரோ அதே மகிழ்ச்சியுடன் தனது உறுப்பினர் அட்டையை சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் மோகன்லால்.