'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
பாலிவுட்டில் பிரபலமான படம் ‛ஹவுஸ்புல்'. இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகி உள்ளன. இதன் 5ம் பாகம் அடுத்து தயாராகிறது. தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 5ம் பாகத்திலும் அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக் தொடருகின்றனர். இவர்களுடன் ஏற்கனவே ஹவுஸ்புல் 3யில் நடித்த அபிஷேக் பச்சனும் இணைகிறார். தருண் மன்சுகானி இயக்குகிறார். முந்தைய பாகங்களை போலவே 5ம் பாகமும் கலகலப்பான காமெடி படமாக உருவாகிறது. ஆகஸ்ட் முதல் இங்கிலாந்தில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.
தயாரிப்பாளர் சஜித் கூறுகையில், ‛‛ஹவுஸ்புல் 5-யில் அபிஷேக்கை மீண்டும் கொண்டு வருவதில் மகிழ்ச்சி. அவருடைய அர்ப்பணிப்பு, நகைச்சுவை ஆகியவை எங்கள் படத்தை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்'' என்றார்.
அபிஷேக் கூறுகையில், ‛‛ஹவுஸ்புல் சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை படம். இதில் நடிப்பதன் மூலம் மீண்டும் எனது வீட்டிற்கு திரும்புவது போன்று உணர்கிறேன். சஜித் உடன் பணிபுரிவது மகிழ்ச்சி. என் சக நடிகர்களான அக்ஷய் மற்றும் ரித்தேஷ் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் வேடிக்கையாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.
ஹவுஸ்புல் 5 படம் அடுத்தாண்டு ஜூன் 6ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.