ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

லைகா நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்தவர் ராஜு மகாலிங்கம். பின்னர் அதிலிருந்து வெளியேறி நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரஜினி அரசியல் வருகையை தவிர்த்து விட்டதை அடுத்து ரஜினி மக்கள் மன்ற பணிகளும் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் ராஜு மகாலிங்கம் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். அப்போது ரஜினிக்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ரஜினி, சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜு மகாலிங்கம். ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், கண்டிப்பாக ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், தான் சொன்னது போலவே எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவரது வருகையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நன்றி தலைவா என்று பதிவிட்டுள்ளார் ராஜு மகாலிங்கம்.




