பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

லைகா நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்தவர் ராஜு மகாலிங்கம். பின்னர் அதிலிருந்து வெளியேறி நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரஜினி அரசியல் வருகையை தவிர்த்து விட்டதை அடுத்து ரஜினி மக்கள் மன்ற பணிகளும் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் ராஜு மகாலிங்கம் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். அப்போது ரஜினிக்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ரஜினி, சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜு மகாலிங்கம். ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், கண்டிப்பாக ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், தான் சொன்னது போலவே எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவரது வருகையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நன்றி தலைவா என்று பதிவிட்டுள்ளார் ராஜு மகாலிங்கம்.