'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

கிட்டத்தட்ட 47 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் தற்போது உருவாகிறது. 'ஜெயிலர்' படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார், இதன்மூலம் ரஜினியை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கும் இயக்குனர் என்கிற பெருமையையும் நெல்சன் பெற்றுள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தில் மீண்டும் ஒரு புதுமையை செய்ய இருக்கிறாராம் நெல்சன்.
அதாவது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சினிமா டிஜிட்டலுக்கு மாறிவிட்டது. அனேகமாக கடைசியாக பிலிம் ரோலில் தமிழில் வெளியான படம் 'தனி ஒருவன்' என்று தான் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பிலிம் ரோலை பயன்படுத்தி ரஜினி, கமல் இருவரும் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு நெல்சன் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ரஜினி, கமல் இருவருமே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.