கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் கோட் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அவரது இசையில் உருவான விசில் போடு என்ற பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடல் விஜய்யின் பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
கோட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. விஜய்யுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதாகவும், அதற்காகவே அவரை ஒரு காட்சியில் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஆரம்பத்தில் ஒரு தகவல் வெளியாகி வந்தது. பின்னர் அது வதந்தி ஆகிவிட்டது. அதேபோல்தான் இந்த செய்தியும் இருக்குமா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.